ஆதரவற்றோர்க்கு உணவளித்து மகிழ்ந்த ''புட் பேங்க்''


கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வ தொண்டு அமைப்பு, இன்று (அக். 16) உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, அந்த அமைப்பைச்சேர்ந்தோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர். 

இதில் மொத்தமாக 1089 உணவு பொட்டலங்கள், 530 வடைகள், 547 பிஸ்கட் பாக்கெட்டுகள், 50 பாக்கெட் ரொட்டிகள், 50 பாக்கெட் இனிப்புகள், 12 கிலோ பழங்கள், 300 தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த உணவுகள் போத்தனூரில் அமைந்துள்ள சத்யா ஜீவன் இல்லம், புளியகுளத்தில் அமைந்துள்ள மெர்சி ஹோம், கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லம், பேரூரில் உள்ள அன்பு இல்லம், அனுகிரஹா அறக்கட்டளை, யுனிவர்சல் அமைதி அறக்கட்டளை, மிஷனரி தொண்டு நிறுவனம், சரணாலயா பெண்கள் இல்லம், தொண்டாமுத்தூர் இல்லம், குழந்தைகள் இல்லம், முதியவர்கள் இல்லம் உள்ளிட்டு ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், வடவள்ளி, ரயில் நிலையம், தடாகம், சாய் பாபா காலனி, பூ மார்க்கெட், காந்திபுரம், பீளமேடு, கே.ஜி.திரையரங்கு மற்றும மருத்துவமனை, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, ஒப்பனக்கார வீதி, 5 முக்கு, ரேஸ்கோர்ஸ், சுங்கம், கிராஸ்கட் ரோடு, பவுர் ஹவுஸ், 100 அடி ரோடு, சுக்கர்வார்பேட், வடகோவை, கவுளிப்ரவுன் ரோடு, லாலிரோடு, துடியலூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், ரெட் ஃபீல்டு, செல்வபுரம், உக்கடம், லட்சுமி மில், ஹோப்ஸ், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஆசிரமங்களுக்கு வழங்கப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...