ஆதரவற்றோர்க்கு உணவளித்து மகிழ்ந்த ''புட் பேங்க்''


கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வ தொண்டு அமைப்பு, இன்று (அக். 16) உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, அந்த அமைப்பைச்சேர்ந்தோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர். 

இதில் மொத்தமாக 1089 உணவு பொட்டலங்கள், 530 வடைகள், 547 பிஸ்கட் பாக்கெட்டுகள், 50 பாக்கெட் ரொட்டிகள், 50 பாக்கெட் இனிப்புகள், 12 கிலோ பழங்கள், 300 தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த உணவுகள் போத்தனூரில் அமைந்துள்ள சத்யா ஜீவன் இல்லம், புளியகுளத்தில் அமைந்துள்ள மெர்சி ஹோம், கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லம், பேரூரில் உள்ள அன்பு இல்லம், அனுகிரஹா அறக்கட்டளை, யுனிவர்சல் அமைதி அறக்கட்டளை, மிஷனரி தொண்டு நிறுவனம், சரணாலயா பெண்கள் இல்லம், தொண்டாமுத்தூர் இல்லம், குழந்தைகள் இல்லம், முதியவர்கள் இல்லம் உள்ளிட்டு ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், வடவள்ளி, ரயில் நிலையம், தடாகம், சாய் பாபா காலனி, பூ மார்க்கெட், காந்திபுரம், பீளமேடு, கே.ஜி.திரையரங்கு மற்றும மருத்துவமனை, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, ஒப்பனக்கார வீதி, 5 முக்கு, ரேஸ்கோர்ஸ், சுங்கம், கிராஸ்கட் ரோடு, பவுர் ஹவுஸ், 100 அடி ரோடு, சுக்கர்வார்பேட், வடகோவை, கவுளிப்ரவுன் ரோடு, லாலிரோடு, துடியலூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், ரெட் ஃபீல்டு, செல்வபுரம், உக்கடம், லட்சுமி மில், ஹோப்ஸ், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஆசிரமங்களுக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...