ஆதரவற்றோர்க்கு உணவளித்து மகிழ்ந்த ''புட் பேங்க்''


கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வ தொண்டு அமைப்பு, இன்று (அக். 16) உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, அந்த அமைப்பைச்சேர்ந்தோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர். 

இதில் மொத்தமாக 1089 உணவு பொட்டலங்கள், 530 வடைகள், 547 பிஸ்கட் பாக்கெட்டுகள், 50 பாக்கெட் ரொட்டிகள், 50 பாக்கெட் இனிப்புகள், 12 கிலோ பழங்கள், 300 தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த உணவுகள் போத்தனூரில் அமைந்துள்ள சத்யா ஜீவன் இல்லம், புளியகுளத்தில் அமைந்துள்ள மெர்சி ஹோம், கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லம், பேரூரில் உள்ள அன்பு இல்லம், அனுகிரஹா அறக்கட்டளை, யுனிவர்சல் அமைதி அறக்கட்டளை, மிஷனரி தொண்டு நிறுவனம், சரணாலயா பெண்கள் இல்லம், தொண்டாமுத்தூர் இல்லம், குழந்தைகள் இல்லம், முதியவர்கள் இல்லம் உள்ளிட்டு ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், வடவள்ளி, ரயில் நிலையம், தடாகம், சாய் பாபா காலனி, பூ மார்க்கெட், காந்திபுரம், பீளமேடு, கே.ஜி.திரையரங்கு மற்றும மருத்துவமனை, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, ஒப்பனக்கார வீதி, 5 முக்கு, ரேஸ்கோர்ஸ், சுங்கம், கிராஸ்கட் ரோடு, பவுர் ஹவுஸ், 100 அடி ரோடு, சுக்கர்வார்பேட், வடகோவை, கவுளிப்ரவுன் ரோடு, லாலிரோடு, துடியலூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், ரெட் ஃபீல்டு, செல்வபுரம், உக்கடம், லட்சுமி மில், ஹோப்ஸ், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஆசிரமங்களுக்கு வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...