சீன சுரங்க விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் பலி: 11 பேர் படுகாயம்

பெய்ஜிங்: சீனாவின் கைசூ மாகாணத்தின் சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் மூச்சுத்திணறி பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

சீனாவின் கைசூ மாகாணத்தின் ஷென்பெங் கவுண்டியில் ராங்ஷெங் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் 18 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் சுரங்கத்தின் அடிப்பகுதியில் திடீரென்று வெடிபொருட்கள் வெடித்து சிதறின.

இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளார்கள் வெளியேற முடியாமல் திணறினர்.தகவல் அறிந்த மீட்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இதில் 11 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...