கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேண்டுமென்றே குற்றவாளியின் கைது நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மேலும், தமிழகத்தில் இந்து நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் கண்காணிக்கபட வேண்டும் என்றும், புதிதாக பொருப்பேற்றுள்ள ஒ.பன்னீர் செல்வம் சுணக்கம் இன்றி செயல்பட  வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழங்கு எவ்வாறு உள்ளது என கண்காணிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவது தவறானது என்றும், உண்மையிலேயே தவறாக பேசினார்களா என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து கைது செய்ய வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு லாரி ஓட்டியதால் மூன்று கல்லூரி மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்தாவது தமிழகத்தில் உடனடியாக டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவதோடு, குடித்து விட்டு வாகன ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...