தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமனம்: மத்திய அரசு முடிவு?

டெல்லி: தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் என உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து வித்யாசாகர் ராவ், செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக பதிவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் உடல்நலம் தேறி வந்தாலும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல்வர் வகித்துவந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் எனவும், அவர் தற்போது வகித்து வரும் மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்புக்கு கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...