தனியார் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிவைத்து கொள்ளை

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனம் உள்ளது. இந்த கொரியர் நிறுவனம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கொரியர் சர்வீஸ் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணியாற்றி இருந்தனர், அப்போது ஒரு ஊழியர் வெளியே சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.9.50லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 



இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் புலியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.



மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொரியர் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காமெராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...