கேரளாவில் முழு அடைப்பு - தமிழக வாகனங்கள் நிறுத்தம்

கேரள மாநிலம் கண்ணூரில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டம் பிணராயி பகுதியை சேர்ந்த ரமீத்(19) என்ற பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் நேற்று காலை ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை துவங்கியுள்ளது. இந்த நிலையில், ரமீத்தை கொலை செய்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேரளாவில் முழு அடைப்புக்கு அம்மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி வாகனங்கள் இயங்காது எனவும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டும் நடைபெற்று வருகிறது.

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. முழுஅடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தனியார் வாகனங்களும் இரு மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துக்கள் இன்று இயக்கப்பட வில்லை உக்கடம் பேருந்து நிலையம் வெறுச்சோடி காணப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...