பெட்ரோல் விலை 14 காசுகள், டீசல் 10 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலவாணி மாற்று விகிதத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி கடைசியாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. 

இந்நிலையில், விநியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 14 காசுகள், டீசல் 10 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...