ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு கோவையில் மேலும் 11 பேரிடம் விசாரணை


கோவை உக்கடத்தில் ஐ.எஸ் .ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் NIA அமைப்பினர் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், உபைதுல் ரஹ்மான்,நபியுல்லா மற்றும் அபுதாகீர் ஆகிய 5 பேரிடம்  மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் 3 குழுக்களாக இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மேலும் மூவரை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் 8பேரின் பாஸ்போட் ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.கேரளாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த அபுபசீர் என்பவருடன் முகநூலில் இந்த இளைஞர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், முகநூலில் இவர்கள் இடையே நடந்த உரையாடல்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கோவை கமிஷ்னர் அலுவலகத்தை தவிர ரகசிய இடத்தில் வைத்து மேலும் மூன்று இளைஞகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோவையில் மட்டும் மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை நடந்த விசாரணையில் முக்கியதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...