சசிகுமார் கொலை வழக்கு: திசை திருப்பும் சி.பி.சி.ஐ.டி !

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் காவல் துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆன்ந்த குமாரை இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல் துறையினர் அச்சுறுத்தல் காரணமாகவே ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கையை இருப்பதாகவும் இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தொடர்பாக விசாரிக்க சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கையும் இந்த பகுதிகளில் தலைதூக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் சசிகுமார் கொலை வழக்கினை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலிசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவதாக கூறி வருவதாகவும் அதே வேளையில் இந்த வழக்கினை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததை போல அவர்கள் திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த காடேஸ்வரா சுப்பிரமணியத்துடன் இந்து அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...