காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




காவிரியில் இருந்து தமிழக அரசுக்கு நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இதை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 




அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் நாகேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
காவிரியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்  500 டி.எம்.சி வரை நீர் பெற்ற தமிழகம், தற்போது 60 டி.எம்.சி வரை கூட பெற முடியவில்லை. காவிரியை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...