ஒடிசா: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: ஒருவர் பலி; 22 பேர் படுகாயம்

கட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

புவனேஷ்வர் - பாதர்க் பயணிகள் ரயில் கட்டாக் அருகே உள்ள ரயில் நிலையம் அருகே வந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நாயக் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...