நீலகிரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

 

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் நாளது வரையில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற 31.08.2017 அன்று இம்மாவட்டத்தில், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகூர், தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, உல்லத்தி, கடநாடு, இத்தலார், கக்குச்சி, நஞ்சநாடு மற்றும் பாலகொலா ஆகிய 10 கிராம் ஊராட்சிகளிலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனாடு, கெங்கரை, கொணவக்கொரை, நடுஹட்டி மற்றும் நெடுகுளா ஆகிய 5 கிராம ஊராட்சிகளிலும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதுமலை ஊராட்சியில் அனைத்து இல்லங்களிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகளை கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உதகை பிரீக்ஸ் பள்ளியில், முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஸ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...