டெங்கு குறித்து ஆன்லைன்-யில் ஆலோசனை வழங்க ஐகிளீனிக் உடன் இணைந்த சிம்ப்ளிசிட்டி


கோவையை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி தற்போது டெங்கு காய்ச்சல் குறித்தான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஐகிளீனிக் உடன் கைகோர்த்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் நோய் வேகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஏராளமானோர் இந்நோயினால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. இதில், நோய் தாக்கத்தின் தன்மையைப் பொறுத்து, மருத்துவர்கள் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அலட்சியப்போக்குடன் செயல்படக் கூடாது. கவனக்குறைவே உயிருக்கு ஆபத்தானது. எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் தென்படுவோர் இதுகுறித்தான ஆலோசனைகளைப் பெற சிம்ப்ளிசிட்டி வாயிலாக ஐகிளீனிக் சேவையைப் பயன்படுத்தலாம். மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் மற்றும் பயனடைய https://goo.gl/BEP69D​​ என்ற இணையதள முகவரியினுள் சென்று கூப்பன் குறியீடான DengueSimplicity -யை பயன்படுத்தவும்.

உங்களது கேள்விகளுக்கு உடனடி பதில்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க 50-க்கும் மேற்பட்ட டெங்கு நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழு காத்திருக்கின்றன.

இந்த சேவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முற்றிலும் இலவசம்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...