மக்காத குப்பை சேகரிப்பு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.5.24 லட்சம் ஊக்கத் தொகை


கோவையில் நூறு சதவிகிதம் தரம் பிரித்து குப்பை சேகரிப்பதற்கான பணிகள் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரத்தில் ஆறு நாட்கள் மக்காத குப்பை சேகரிப்பு, புதன்கிழமை மட்டும் மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய மக்காத குப்பை சேகரிக்கும் திட்டம் ஜூன், 21ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், ஜூன் மாதம் முதல் கோவை மாநகரில் 100 வார்டில் அனைத்து பகுதிகளிலும் வாரத்திற்க்கு ஒரு நாள் மட்டுமென ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மக்கும் குப்பை சேகரிக்கப்படும்.

இதன் முயற்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் சுலபமாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்ற புதன்கிழமை மட்டும், 209.77 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டது. அவற்றை விற்று வந்த தொகையில், 5.24 லட்சம் ரூபாய் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டது.

மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களை சில தனியார் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. அந்நிறுவனத்தினர் கொடுக்கும் தொகை, தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதனால், 209.77 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டதில் ரூ. 5.24 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 15.32 டன், மேற்கு - 62, வடக்கு - 25.45, தெற்கு - 27.4, மத்திய மண்டலம் - 79.6 டன் சேகரமானது. கடந்த ஏழு வாரங்களில் 1,005.86 டன் குப்பை சேகரமாகி உள்ளது. 18.45 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இனி வரும் நாட்களில், 300 டன் மக்காத குப்பை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் 'ஸ்பான்சர்' உதவியுடன் தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது' என்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...