குழந்தைகள் மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கான மாநாடு 11-ம் தேதி துவக்கம்

பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் மருத்துவர்களுக்கான 42-வது மாநாடு கோவை கொடிசியா அரங்கத்தில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு  இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் புமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 25 சதவிகதமாக இருந்தது. தற்போது, 15-20 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரு நாட்டில் மருத்துவத்துறை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கொண்டு கணக்கிட முடியும்.



இந்தியாவில், கேரள மாநிலத்தில் தான் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தற்போது கோவையில், குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான 42-வது மாநாடு நடைபெற உள்ளது. கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாடு 11-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு கேரளா மற்றும், கர்நாடகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நுணுக்கங்கள், மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் குழந்தைகளை தாக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கின் மூலமாக குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...