ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பாதாள சாக்கடையை இணைக்க உத்தரவு

கோவை, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு சுற்றுவட்டார பகுதியில் 1,500 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கழிவு நீர் சாலையில் செல்லாமல் இருக்கவும், குளத்தில் கலக்காமலும், வடிகாலில் மழை நீர் மட்டுமே செல்லும் வகையில் கட்டுமானம் செய்ய வேண்டும். அத்தகைய ஏற்பாடு செய்யும்போது கொசு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் பழைய மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கோவையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹோப் காலேஜ் முதல் சிங்காநல்லுார் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் அல்வேர்னியா கான்வென்ட் முதல் ஒண்டிப்புதூர் வரை, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.5.25 கோடி செலுத்த வேண்டும். மாநகராட்சியில் நிதி இல்லாததால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என திருத்திய மதிப்பீடு தயாரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தற்போது, உக்கடத்தில் கட்டுமான பணி முடிந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஒண்டிப்புதூரில் நாளொன்றுக்கு 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது.

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் முடிந்து விட்டதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழலில் எந்தெந்த பகுதிகளில் இணைப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என பொறியியல் பிரிவினருடன் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மையத்தின் சுற்றுவட்டார பகுதியில் 1,500 இணைப்புகள் வழங்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...