கோவையில் மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் கைது



கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் புதூரில் ஸ்ரீ முருகன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஒரு சித்த மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு மருத்துவம் பயிலாமல் ஒரு பெண்மணி நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, லதா (63) என்ற பெண் சித்த மருத்துவம் டிப்ளமோ பயின்று விட்டு, ஆங்கில மருத்துவ வழியில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோமங்கலம் காவல்துறையினர் லதாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...