செட்டிப்பாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கோவை போத்தனூர் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இரயில்கள் சேவை துவங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போத்தனூர் - பொள்ளாச்சி இரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க இரயில்வே துறை அனுமதி அளித்த நிலையில், இதற்காக பேரூராட்சி நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினரும் 49 லட்ச ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...