செட்டிப்பாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கோவை போத்தனூர் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இரயில்கள் சேவை துவங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போத்தனூர் - பொள்ளாச்சி இரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க இரயில்வே துறை அனுமதி அளித்த நிலையில், இதற்காக பேரூராட்சி நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினரும் 49 லட்ச ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...