ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 'மாஸ்க்' அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலியை முன்னிட்டு கோவை மாவட்ட வனத்துறை, பாரதியார் பல்கலைக் கழகம் BSMED நேச்சர் கிளப், கலாம் மக்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்தும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா இன்று காலை 10.30 மணிக்கு கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம், பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கியது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க சுமார் ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் அவர்களின் 'மாஸ்க்' அணிந்து கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கினர். இப்பேரணி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கி வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.



இந்நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மற்றும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் விவேகானந்தன், ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் துணை ஆளுநர் காட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செந்தில் குமார் ஒருங்கிணைத்தார்.



Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...