ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 'மாஸ்க்' அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலியை முன்னிட்டு கோவை மாவட்ட வனத்துறை, பாரதியார் பல்கலைக் கழகம் BSMED நேச்சர் கிளப், கலாம் மக்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்தும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா இன்று காலை 10.30 மணிக்கு கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம், பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கியது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க சுமார் ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் அவர்களின் 'மாஸ்க்' அணிந்து கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கினர். இப்பேரணி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கி வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.



இந்நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மற்றும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் விவேகானந்தன், ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் துணை ஆளுநர் காட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செந்தில் குமார் ஒருங்கிணைத்தார்.



Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...