பத்திரிகையாளர்கள் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை பதிவு செய்யக்கூடாது: பயிற்சிப்பட்டறையில் செய்தியாளர் சுப்புராஜ் பேச்சு


இளம் பத்திரிகையாளர்கள் மற்றும் வருங்கால பத்திரிகையாளர்கள் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து துறை வல்லுனர்களைக் கொண்டு கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது. அதன்படி, 8-வது பயிற்சிப்பட்டறை இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. 



இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். இன்றைய பயிற்சிப்பட்டறையில் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் செய்தியாளர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'காவல் துறை தொடர்பான செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 



குற்ற விசாரணை முறைச்சட்டம் (CRPC) காவல்துறையின் அதிகாரங்களையும், செயல்படும் முறைகள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டுள்ளது. காவல்துறை தொடர்பான செய்தி சேகரிப்பின் போது, ஒவ்வொரு செய்தியாளரும் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு செய்தியினையும் மிக நேர்த்தியாக கையாள வேண்டும். எந்த ஒரு ஆதாரமுமின்றி யூகத்தின் அடிப்படையில் செய்திகளை கொடுக்கக் கூடாது. அவ்வாறு யூகத்தின் அடிப்படையில் செய்திகளை பதிவு செய்யும் போது சம்மந்தப்பட்டவர் மீது வழக்குகள் பாய்வதற்கான வாய்ப்பு மிக அதிகம். 

காவல்துறையில் அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரையில் அனைத்து அதிகாரிகளிடமும் நல்ல உறவு முறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு செய்தியை முன்கூட்டியே நம்மால் தெரிந்துகொள்ள முடியும். 

க்ரைம் செய்தி சேகரிப்பின் போது, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முழுமையாக விசாரித்து செய்தியை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து நாம் தனித்து நிற்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். 



பயிற்சிப்பட்டறையின் முடிவில் பத்திரிகையாளர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...