இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நாளை துவங்குகிறது. கோவை சர்வஜனா பள்ளியில் நடைபெறவுள்ள பேன் பார்க் நிகழ்ச்சியில் ஆஸ்தேரிலியாவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ பங்கேற்கிறார்.

இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் இரண்டாவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நாளை துவங்குகிறது. டுயூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் விளையாட்டு மைதானம், திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இரண்டாவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை துவங்குகிறது. முதல் போட்டியில் டுயூட்டி பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடுகிறது.

லீக் சுற்று முறையில் நடைபெறும் இப்போட்டியில் தேர்வாகும் அணி அடுத்த மாதம் 20-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். தினேஷ் கார்த்திக், லக்‌ஷ்மிபதி பாலாஜி, முரளி விஜய், ரவிசந்திர அஸ்வின் என இந்திய அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இதன் துவக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டிகளை கண்டுகளிக்க கோவை சர்வஜனா பள்ளியில் பேன் பார் அமைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்க அனைத்து வகையான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு கிரிகெட் சங்கம் மற்றும் எஸ்.என்.ஆர்.கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆஸ்தேரிலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பங்கேற்று பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரை மூலம் போட்டியை கண்டு களிப்பதுடன் வர்ணனையும் செய்ய உள்ளார். மேலும், ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்துழைப்பை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க அமைப்பினர் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...