40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றியவர் வெங்கைய நாயுடு- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி

இந்திய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சியாக இருந்தபோது அனைத்து தரப்பினரையும் தனது பேச்சுத் திறனால் கவர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

மேலும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியதாவது:-

வெங்கையா நாயுடு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவர் வெற்றி பெற வேண்டும். இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவருமே அரசியலில் இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். வெங்கையா நாயுடு தற்போது பொருப்பில் இருப்பதாலும் தினந்தோறும் மக்களையும் செய்தியாளர்களையும் சந்தித்து வருபவர் என்பதால் ஆக்கமும் செயல்பாடும் அதிகளவில் இருக்கும். 

மேலும், வெங்கையா நாயுடுவுக்கு தமிழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் பெரும் ஆதரவு தந்து அவரை வெற்றி அடைய செய்யவேண்டும். தமிழகத்தில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என கூறி ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது வரவேற்கத்தக்கது. முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் வருவது வருத்தமளிக்கிறது. அரசின் நோக்கம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. ஏழை எளியோர் வீடு கட்ட தட்டுப்பாடு இல்லாமல் ஓரிரு நாளில் மணல் கிடைக்கும் வகையில் மணல் விநியோகத்தை சீரமைக்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய ரயில் தடம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றும் கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கும் ரயில்கள் இயக்கபடாமல் இருப்பதால் தென் மாவட்ட மக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் குறிப்பாக பகல் நேரங்களிலும் இயக்க வேண்டும்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...