ராஜ விதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவக்கம்


கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவங்கியது. இதனை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூர் மருதாசல அடிகளார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



முதல் விற்பனையை துவக்கி வைத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், புத்தக வாசிப்பு என்பது அனைவரிடமும் உருவாக வேண்டும். இது மாதிரியான புத்தக திருவிழாக்களால் புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சமுக வலைதளங்களின் மூலம் வாசிக்கப்படுவது மனதில் தங்குவது இல்லை. புத்தகமாக படிக்கும்போது மன பயிற்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இன்று துவங்கிய இந்த புத்தக திருவிழா வரும் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்மீகம், அறிவியல், குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளதாக விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார். பல்வேறு தரப்பட்ட நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தக கண்காட்சி கோவை மக்களின் புத்தக வாசிப்புக்கு கிடைத்த விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...