குடிநீர் வழங்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும், குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் அன்னூர் எம்ஜிசி பாளையம் பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், எம்ஜிசி பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணி துவங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உடனடியாக திட்டப் பணியினை துவங்க வேண்டும்.

மேலும், குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதுமான அளவு குடிநீர் விநியோகிப்பது இல்லை. இதுகுறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பிற கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் பெற்றுவரவேண்டியுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்னூர் பகுதீ மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...