அரசின் மீது தவறான கருத்துக்களை கமலஹாசன் முன்வைத்து வருவதாக துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்திற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. அரசின் மீது தவறான கருத்துகளை நடிகர் கமலஹாசன் முன்வைப்பதாக தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் வேளாண் கண்காட்சியைக் பார்வையிட்ட பிறகு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  பேசுகையில், நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விளம்பரபடுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அரசு நிர்வாகத்தில் எந்த துறையில், எந்த அலுவலகத்தில் ஊழல் நடப்பதை அவர் பார்த்தார். அவருடைய விஸ்வரூபம் படம் வெளி வருவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்த அரசின் மீது தேவையில்லாத பழியை சுமத்த இது போன்ற கருத்துகளைக் தெரிவித்து வருகிறார். இதனை கமலஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...