மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியப் பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையின் காலநிலை இனிமையாக இருக்கிறது. மேக மூட்டத்துடன் இருக்கிறது. எப்போதாவது சிறு தூறல்கள் வரலாம். வார கடைசியில் ஊர் சுற்றுவதற்கு ஏற்ற கால நிலை இது.

ஜூன் மாத கடைசி வாரத்தில் பெய்த மழைக்கு பிறகு நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகள் மழை பெறாமல் அமைதியாக இருந்தன. இப்போது வெளியே தெரியாத அளவிற்கு மிதமான மழையை இந்த இரண்டு பகுதிகளும் பெற்று வருகின்றன. வரும் 19-ம் தேதியில் இருந்து மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கும். 2-3 நாளைக்கு பெய்யக் கூடும். தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம். 

தமிழக மலை பகுதிகளில் பெய்த மழை விவரங்கள். mm கணக்கில் 14.07.2017 காலை 8.30 வரை பெய்த விவரங்கள்:

நீலகிரிக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • எமரால்டு - 80
  • கிளென்மோர்கன் - 29
  • மேல் பவானி - 28
  • அவலான்ஜி - 25
  • கூடலூர் பஜார் - 21
  • நடுவட்டம் - 20
  • கேத்தி - 18
  • முக்குறுத்தி - 17
  • பார்ஷன்ஸ் வேளி - 16
  • பைகாரா - 13
  • கோத்தகிரி - 10
  • உதகை - 10
  • குந்தா பாலம் - 10
  • சந்திநல்லா - 10
  • போத்திமுன்டு - 10


கோவைக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • பரம்பிக்குளம் அணை - 45
  • வால்பாறை தாலுகா அலுவலகம் - 40
  • சோலையார் அணை - 38
  • வால்பாறை பிடிஓ - 34
  • சின்ன கல்லார் - 30
  • சிறுவாணி அணை - 27
  • துனகடவு - 25
  • மானாம்பள்ளி - 23
  • பொள்ளாச்சி - 13
  • கோத்தகிரி - 11
  • அடிவாரம் - 10


சென்னையை பொறுத்த வரையில் சிறு தூறல்கள் ஏற்படலாம். மற்றும் உதகை மாதிரியான கால நிலை நிலவுகிறது. இடியுடன் கூடிய மழைக்கு நாம் காத்து இருக்க வேண்டும்.

சென்னையில் இப்போது இடியுடன் கூடிய மழையை எதிர் பார்க்க வேண்டாம். இருண்ட வானத்துடன் மேக மூட்டத்துடன் இருக்கும். ஆனால் சென்னையின் தெற்கு பகுதியில் இருந்து பாண்டி மற்றும் கடலூர் பகுதி வரை மழை வரலாம்.

தமிழ் நாட்டின் இதர பகுதிகள்

டெல்டா மாவட்டங்களை ஒரு பகுதியில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திலும் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட உறுதியான மழையை இன்று எதிர் பார்க்கலாம். வட மேற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழையை உறுதியாக எதிர் பார்க்கலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் தூறல்கள் அல்லது மிதமான மழையை எதிர் பார்க்கலாம். கடலூரில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை உள்ள பகுதிகளும் மழை பெற வாய்ப்பு உண்டு.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...