தமிழ்நாட்டில் விளைநிலங்களை விட்டு வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சீமான் பேச்சு

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. இந்நிலையில், ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்கு திராணியற்ற அரசாக மாநில அரசு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடகோவை மேம்பால பூங்காவில் உள்ள பெருந்தமிழர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

அரசியல் வரலாற்றில் தூய தலைவராக இருந்தவர் காமராசர் அவர்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடம் திறந்தவர். ஆனால், இன்று தெருவிற்கு தெருவில் மதுக்கடை அதிக அளவில் திறக்கப்படுகிறது. அவர் இல்லையென்றால் இன்று கல்வியறிவு பெற்ற சமுதாயமாக இருந்திருக்க முடியாது. உண்மை, நேர்மை, எளிமை போன்றவற்றை அவரது பெரும் சொத்தாக வைத்து வாழ்ந்து வந்தார். இன்றைய பிள்ளைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வழித்தடம் காட்டித்தந்தவர். 

அவரது ஆட்சியை போலவே நடத்தவேண்டும் என்று சொல்பவர்கள் இன்று ஊழல் செய்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்று பேசுவதே அர்த்தமற்றது ஆகும். காமராசர் எந்த வழியில் பயணித்தாரோ அந்த வழியில் நாங்கள் பயணிக்க இந்நாளில் உறுதிமொழி ஏற்கின்றோம்' என்றார்.



மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்து சீமான் பேசுகையில், தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தியா நட்பு நாடு என்று கூறுகிறார்கள் ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களை இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தண்டிக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்வதில்லை. இதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. விளைநிலங்களை விட்டு இன்று வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்க்கு மாநில அரசிற்கு திராணியில்லை. எங்களிடம் அதிகாரம் இருந்திருந்தால் காவேரி வேளாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமைத்திருப்போம். 

மதுக்கடையை தடை செய்ய வழக்கு தொடர்ந்தால், அது அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என்கின்றனர். நீதியின் பக்கம் மக்களுக்கு அநீதி நடக்கிறது' என்றார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...