கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி- பொள்ளாச்சி- கோவை-க்கு ரயில் சேவை துவங்கம்


கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை- பொள்ளாச்சி வரை செல்லும் அகல ரயில் பாதை பாசஞ்ஜர் ரயில் இன்று மதியம் 1.35 மணிக்கு துவங்கியது.

கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துகடவு வழியாக பொள்ளாச்சி வரை செல்லம் பாசஞ்ர் ரயில் இன்று தனது சேவையினை துவங்கியது. கோவையிலிருந்து போத்தனூர் வரை ஏற்கனவே அகல ரயில் பாதை உள்ள நிலையில் போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை அகல ரயில் பாதையாக மாற்ற பல வருடங்கள் கடந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த போது விரைவில் சேவை துவங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் முடிந்து பயணிகளுக்கான ரயில் சேவை இன்று துவங்கியது. 

தினமும் மதியம் 1.35-க்கு கோவையிலிருந்து, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் பொள்ளாச்சி சென்றடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3.50-க்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை வந்தடைகிறது.

இதற்கான கட்டணம் 15 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் கூறும்போது, மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த கட்டணம் என்பதால் பலரும் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...