மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை: உழவே தலை கருத்தரங்கில் கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் 'அக்ரி இன்டெக் 2017' என்ற வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் பகுதியாக 'உழவே தலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் கொடிசியா ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில் பாரதிய வித்யா பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இயற்கை விவசாய அறிஞர்கள் 16 பேர் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்தினர். 



முன்னதாக கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் நாம் நிறைய சாதித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அனைத்து வளங்களும் நம்மிடம் இருந்தும் இந்த தொய்வுக்கு காரணம் மக்களின் பங்களிப்பு இல்லாமல் போனதே காரணம். இவ்வளவு பெரிய தேசத்தை ஒரு அரசியல் கட்சியோ அல்லது முதல் அமைச்சரோ மட்டும் கவனித்துக் கொள்ள முடியாது. 

மக்கள் ஆக்கப்பூர்வமாக செயல் பட்டு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை சதவிகிதம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் மீதான மக்களின் அலட்சியம் மற்றும் அறியாமை நீங்கும் போது தான் பின்னடைவு நீங்கும். உழவே தலை என்ற இந்த கருத்தரங்கிற்கு அதிகமான இளைஞர்கள் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிரச்சனைகள் மீது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது. ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை. இயற்கையை கெடுப்பது, விவசாயத்தை புறக்கணிப்பது விவசாயத்தின் மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவைகள் தவிர்க்கப்பட்டு, இளைஞர்களை விவசாயத்திற்குள் புகுத்திட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். 



இக்கருத்தரங்கில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன், சித்த மருத்துவர் சிவராம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...