வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நடப்பாண்டிற்கு (2017- 2018) 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைந்தளவே மழைப்பொழிவை தந்ததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அணைகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டன.

நீர் நிலைகளிலும் நீர் இருப்பு இல்லாததால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இவ்வாறு வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வறட்சியினால் விவசாயிகள் பாதிக்காமல் இருந்திடும் வண்ணம் பயிர் மேலாண்மைக்கு சொட்டுநீர் பாசனத்தின் அவசியமும், பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெரியதொடங்கியுள்ளது. இந்நிலையில் வேளாண், தோட்டக் கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு கரும்பு 190 எக்டர், பருத்தி 25 எக்டர், தென்னை 500 எக்டர், மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களுக்கு 100 எக்டர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 400 எக்டரும் சேர்த்து மொத்தம் 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு 40 சதவிகிதமும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 70 சதவிகிதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டுநிர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில உரிமைச்சான்று, ரேஷன்காட்டு, ஆதார் எண், நீர் ஆய்வு அறிக்கை மற்றும் சிறுகுறு விவசாயி சான்றுடன் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மேலும் தகவலுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், லாலிரோடு, கோவை- 13. தொலைபேசி எண் 0422- 2432739 தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...