பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் "இசைஞர்- 2017" போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தி இந்து தமிழ் நாளிதழ், கோவை நன்னெறிக் கழகம் மற்றும் சரோஜினி நடராஜ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி!

இசைக்கருவிகளை இசைக்கும் இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் கோவை நன்னெறிக்கழகம், சரோஜினி நடராஜ் அறக்கட்டளை மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைந்து ‘இசைஞர்- 2017’ எனும் இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு 13 முதல் 19 வயதிற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

தகுதிச்சுற்று போட்டிகள் ஜூலை 29-ம் தேதியும் இறுதிப் போட்டி ஜூலை 30-ம் தேதி அன்றும் கோவை சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவரவர் இசைக்கருவிகளை கையோடு எடுத்து வரவேண்டும். உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன் இசைக்க விரும்பும் கருவியின் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://bit.ly/hindu-instrumental-contest தி இந்து அலுவலகத்தில் (19&20 ஏ.டி.டி காலனி, எல்.ஐ.சி ரோடு, கோவை-18) நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-07-2017.

வயது சான்று (பள்ளி / கல்லூரி அடையாள அட்டை) போட்டி நடைபெறும் அன்று கொண்டு வரவேண்டும்.

இளம் திறமைகளைக் கண்டறிந்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில் இலாப நோக்கங்கள் இன்றி நடத்தப்படும் நிகழ்ச்சி இது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு: 9843131323 / 0422 - 2212572.

இதில், காட்ஸ் வில்லா, உடுமலை.காம் மற்றும் ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி மற்றும் டிஜிட்டல் பார்ட்னராக சிம்ப்ளிசிட்டி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...