சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷணன் தலைமையுரையற்றினார். துணை முதல்வர் எஸ்.பெர்னார்டு எட்பர்டு வாழ்த்துரை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிளுவை சங்க அமைப்பாளர் ஏ.அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என்றும், அது கிடைப்பது மிகவும் அறிதானவை என்றும் அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். முதியோர்களை நாம் மதிக்காமல் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும். இரத்ததானம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.



இதில், அக்கல்லூரி மாணவர்கள், செஞ்சிளுவை சங்கத்தினர், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...