கோவையில் வனத்துறையினரின் அதிரடி சோதனையில் விலங்குகளின் ரோமங்களிலால் தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல்



வன விலங்குகளின் ரோமங்களில் இருந்தோ அல்லது அவற்றின் உறுப்புகளை கொண்டோ எந்த பொருட்களையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கீரி மற்றும் நரி போன்ற வன விலங்குகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. 

இதை தொடர்ந்து, இன்று வன உயிரின குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.



வன உயிரின குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மதிவாணன் தலைமையில் 12 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து கோவையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது காந்திபுரம், டவுன்ஹால், சவுரிபாளையம் போன்ற பல்வேறு இடங்களில் வன உயிரினங்களின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தொடர்ந்து, சோதனை நடைபெறும் என்றும் இது தொடர்பாக நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...