'நோ பார்க்கிங்'-ல் நின்ற போலீஸ் வண்டிக்கு பூட்டு


கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அத்தகைய இடங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் சார்பில் 'நோ பார்க்கிங்' பலகை வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை மீறி அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.



இந்தநிலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் நின்ற போலீசாரின் வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் பூட்டு போட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்' பலகை வைத்துள்ளனர். ஆனால், இன்று அப்பகுதிக்கு வந்த காவல்துறை வாகனம் ஒன்று அறிவிப்பு பலகைக்கு முன்புறமே வாகனங்களை நிறுத்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'-கில் நின்ற கார்களின் சக்கரங்களுக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து, அருகில் நின்ற போலீசாரின் வாகனத்தின் சக்கரங்களுக்கும் பூட்டு போட்டுச்சென்றனர். ஆனால், பூட்டிய சில நிமிடங்களிலேயே அந்த பூட்டு அகற்றப்பட்டது.



'நோ பார்க்கிங்'-யில் நின்ற வாகனம் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சொந்தமான வாகனம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...