வீட்டிலிருந்த நொருக்குத் தீணிகளை தின்றுவிட்டு ஹாயாக பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேட்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் நொருக்குத் தீணிகளை கொள்ளை அடித்தவர்கள்  சாவுகாசமாக அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பின் குழந்தையின் பள்ளி புத்தக பையில் வைத்து திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு ராஜேந்திர குமார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...