அரசு அதிகாரிகள் ஊழல் புகார் மீது நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதாக நான்கு மாதங்களுக்கு முன்பு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக புகார் அளித்ததிற்கு என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்ட நிர்வாகத்தில் கட்டுப்பாடற்ற வெளிப்படையான ஊழல் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 6ம் தேதியன்று ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி இன்று ஊழல் தடுப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஊழல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி அலுவலகம் உள்ளது என்றும் அதனை அணுகுமாறும் மாவட்ட நிர்வகத்தால் ஊழல் தடுப்பு இயக்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழல் தடுப்பு இயக்கத்தினர், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பேசுவதாக மாவட்ட ஆட்சியர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினம்தோறும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்களுடைய குறைகளை சொல்லும் நிலையில், சாதாரண பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...