தண்ணீர் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் சலவை தொழிலாளர்கள் மனு

தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இடையர் வீதி கன்னட வன்னார் சந்து பகுதி சலவை தொழில் செய்து வரும் மக்கள் கூறியதாவது :-

தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கபட்ட டோபிகானாவில் 50-ம் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைக்க பெறாத காரணத்தால் சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி தொகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். 

எனவே, தாங்கள் பணி செய்து வரும் டோபிகானா அருகே போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலை சீராகும் வரை தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...