தமிழகத்தில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்றே கூறினேன்- பொன்.ராதா கிருஷ்ணன்


இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் தாக்கப்பட்டால் காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற உணர்வு தொண்டர்களிடையே மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலவரம் நடக்கும் என நான் கூறவில்லை, கலவரம் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்றே கூறினேன் என கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் சம்பவங்கள் மர்மமாக இருப்பதால் அது குறித்த சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் இந்து மத தலைவர்கள் தாக்கப்படுவதால், கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மட்டுமே கூறினேன். கலவரம் ஏற்படுத்த சொல்லவில்லை. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என கூறி பாஜக-வினர் தமிழகம் முழுவதும் பணம் வசூலிப்பது சரியா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, தனது ஊரிலேயே தனது பெயரை சொல்லி மோசடிகள் நடந்துள்ளது. உண்மையான பாஜக தொண்டன் இது போன்ற மோசடிகளில் ஈடுபட மாட்டான் என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறை சட்டம் கொண்டு வருவது அந்நாட்டு அரசியலுக்கு சரியாக வரும். மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அனுக வேண்டும் என பிரதமர் இலங்கையை வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது தமிழக மீனவர்களை இந்த சட்டம் பாதிக்காது. 

இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. எதிர்க்கும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கட்சியை வளர்க்க பாஜக-வினர் நாடு முழுவது சுற்றுப்பயணம் மேற்கொள்கின்னர். அதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 

தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் உருவாகும் என நான் நம்புகிறேன். 60 சதவிகிதம் சுற்றுலா தளங்களில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை மேம்பாடு செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்ஹப அவசியம். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மக்களுக்கு தொடர்ந்து சந்தேகம் ஏற்படுவது அரசுக்கு நல்லது இல்லை. பெரிய சந்தேகத்திகுரிய இடமாக மாறி வரும் கொடநாடு விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் விசாரணை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...