கோவை ஆட்சியர் தலைமையில் எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வழங்கல் துறையின் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும்போது நுகர்வோர்களின் குறைகளை களைவது தொடர்பாக எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எண்ணை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நுகர்வோர்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தும்பொது பாதுகாப்பு காரணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எரிவாயு உருளையின் எடை மற்றும் அதில் எரிவாயு கசிவு இல்லாமல் இருப்பதை பரிசோதிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எரிவாயு உருளைகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல், ஒரு பொதுவான இடத்தில் வைத்து விநியோகிக்கப்படுவதால், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5 எரிவாயு உருளைகள் வரை மற்றும் 100 கிலோ எடை வரையிலும் பொதுவான இடத்தில் வைத்து விநியோகிக்க வேண்டும்.

நகர்புறங்களில் உணவு விடுதிகள் மற்றும அடுமனைகளில் எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கும், எரிவாயு முகவர்களுக்கும் அறிவுறுத்துகிறேன். 

மேலும் எரிவாயு விநியோகம் செய்யும் போது எரிவாயு உருளையின் மதிப்பிற்கு மேல் தொகை வசூலிக்க கூடாது. அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும். ஆதார் அட்டை வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு மானியம் வெவ்வேறு கணக்குகளில் சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு சமீபத்தில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மானியம் சேர்க்கப்பட வேண்டும்.

எரிவாயு உருளை வாங்கும்போது கேஸ் அடுப்பு, மிக்ஸி போன்ற பொருள்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என நுகர்வோர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு, அதனை சரி செய்து கொள்ள வேண்டும். பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி எரிவாயு உருளை விநியோகம் செய்யவேண்டும்" என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன், நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...