ஈஷா யோகா மையத்தில் ஜூலை 9 அன்று குருபௌர்ணமி அனுசரிப்பு

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா ஜூலை 9ஆம் தேதியன்று (ஞாயிற்று கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்து, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நாளில் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகியின் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சத்குரு சொற்பொழிவு அளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பினை டாடாஸ்கை குரு தொலைக்காட்சி (#1060) அல்லது http://isha.sadhguru.org/guru-purnima/ ஆகியவற்றில் காணலாம்.

மேலும், அன்றைய தினம் தியானலிங்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் மற்றும் நீர் அர்பணிப்பு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் மற்றும் மஹாஆரத்தி நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...