தடை செய்யப்பட்ட போடோ அமைப்பினர் கோவையில் அதிரடிக் கைது

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை கோவையில் இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தை தங்களுக்கென தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பயங்கரவாத செயலில் மக்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி நாடு கேட்டு போராடும் நேஷனல் டெமாக்ரடிக் பிரன்ட் ஆப் போடோலாந்து என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தில்லியில் சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை சித்தநாயக்கன்பட்டியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.



இதையடுத்து இந்திய ராணுவ உளவுத்துறை (எம்.ஐ.ஏ.) உயர் அதிகாரி பிரியதர்ஷினி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு தில்லியில் கைதான தீவிரவாதி கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்காணித்து வந்தார். அப்போது சித்தநாயக்கன்பட்டியில் தனியார் கோழிபண்ணை ஒன்றில் இரு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.



இதையடுத்து கோவை காவல்துறையினரின் உதவியுடன் நேற்று இரவு (வியாழனன்று) கோழிப்பண்ணைக்குள் ராணுவ உளவு பிரிவு படையினர் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த அசாம் தீவிரவாதிகள் இருவரை கைது செய்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த உபேன்பு‌ஷன் மத்தேரி (41), பிக்காரம் பாசுமத்தேரி (32) என்பது தெரியவந்தது. அசாமில் தனி மாநிலம் கேட்டு போராடும் நே‌ஷனல் டெமாக்ரட்டிக் பிரண்ட்ஸ் ஆப் போடோலேண்ட் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.



தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தநாயக்கன்பட்டி வந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. தற்போது இருவரிடமும் இரகசிய இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி வெடியப்பன், இருவருக்கும் வரும் ஜூலை 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...