கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பயிற்சி

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அனைத்து சாலையோர வியாபாரிகளையும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுவரை, 4,000 பேருக்கு அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. 



இதற்கென, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் சாலையோர கமிட்டியில், நகர் நல அலுவலர், போக்குவரத்து போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இக்கமிட்டியினர், மாநகராட்சி பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை சாலையோர வியாபாரிகளுக்காக தேர்வு செய்யப்படும். அங்கு, வியாபாரிகளை வகைப்படுத்தி இடம் ஒதுக்கப்படும்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிகையில், சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு உதவிகள் செய்கின்றன. அவற்றை வியாபாரிகள் அறியாமல் உள்ளனர். அதனால், சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னோடி வங்கி மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், திட்ட அலுவலர், உணவு கலப்பட தடுப்பு பிரிவினர், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்பர். அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் அழைக்கப்படுவர். மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி, மானியம், உணவு பண்டங்கள் தயாரிப்பது, விற்பதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை, குப்பையை கொட்ட வேண்டிய இடங்கள் உள்ளிட்டவற்றை, அலுவலர்கள் விளக்குவர். திட்டம் தொடர்பான தொகுப்புரை புத்தகம் தயாராகி வருகிறது. விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.' இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...