தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் வரும் ஜூலை 6-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை கேரளா கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு கூறியதாவது:-

அரசு மணல் குவாரிகளில் போதிய அளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்து உள்ளது. 

கோவை மாவட்டத்தில் கட்டுமான பணிக்கு நாள் ஒன்றுக்கு 1000 லோடு மணல் கிடைக்கப் பெற்ற நிலையில் தற்போது 150 முதல் 200 லோடு மணல் மட்டுமே கிடைப்பதால் கட்டுமான தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எம்.சாண்ட் மணல் முழுமையாக கிடைக்க மூன்று, நான்கு மாதங்கள் கடக்கின்றன. குவாரிகளில் எம்.சாண்ட் மணல் கிடைக்க மாநில அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதால் கட்டுமான தொழிலில் நேரிடையாக ஈடுபட்டுள்ள 4 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை நீக்குதல், பத்திரப்பதிவு கட்டணத்தை குறைத்தல் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து கட்டுமான அமைப்புகளின் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் தேதி மாலை கோவையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வஉசி மைதானம் வரை பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...