தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்த தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். கேரளா மாநிலத்தில் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக ரூபாய் 500 வரை கேரளா அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்தி தருவதாகக் கூறி வாக்குறுதி அளித்தனர். அதனை பெரிதும் நம்பிய அவர்கள் வயிற்று பிழைப்புக்காக கடும் மழையிலும், பனியிலும், யானை, சிறுத்தை, புலி போன்ற காட்டு மிருகங்களின் தொல்லையிலும் அடிமை போல் வாழ்க்கை வாழும் அவலம் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. எனவே, தேயிலை தொழிலாளர்களுக்கு உரிய சம்பள வழங்கக்கோரி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என தேயிலை தொழிலாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...