ஓசை அமைப்பு சார்பில் 38 பயிற்சி வனவர்களுக்கு கோவையில் பயிற்சி முகாம்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை அமைப்பானது சுற்றுச்சூழல் குறித்தான பல்வேறு பிரச்சனைகளில் பங்கேற்று சீரமைத்து வருகிறது. இந்நிலையில், ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது தலைமையில் இந்திய அளவில் இருந்து கோவை வந்த 38 பயிற்சி வனவர்களுக்கு மரம் மறுநடவு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.



முன்னதாக, கோவை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, சக்தி சாலை விரிவாக்கப்பணிக்காக மறுநடவு செய்யப்படவிருந்த மரங்கள் பார்வையிடப்பட்டன. அப்போது, இன்று வேப்ப மரம் ஒன்று மறு நடவு செய்யப்பட்டு குமரகுரு கல்லூரியில் நடப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் 32 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று துணை வன பாதுகாவலர்கள் தலைமையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை வன பாதுகாவலர் விஜய் நமது சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

ஓசை அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு எங்களது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒரு மரத்தினை மறுநடவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதனை இவர்கள் மறுநடவு செய்வது மட்டுமின்றி அந்த மரம் மீண்டும் உயிர்பெற்று வளர்வதிலும் அக்கரைகொண்டு செயல்படுகின்றனர்.

தற்போது, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 38 பேரில் 31 பேர் மகாராஷ்டிரா, 5 பேர் குஜராத், 2 பேர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இப்பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் பயின்றுள்ளனர்" என்றார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...