திருடன் என்று பழி சுமத்தியதால் தொழிலாளி தற்கொலை

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு ஸ்ரீகவுரி என்ற 5 வயது பெண்குழந்தை உள்ளது.

ராமச்சந்திரன் தங்க நகை தொழில் செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் துவங்கிய ராமச்சந்திரன் நகை செய்வதற்காக தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் நகை செய்து தரவில்லை என்றும், இதனால், நண்பர்கள் அவருக்கு திருடன் என்று பழி சுமத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் மும்பையில் சிறிது நாட்கள் தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்த அவர் மன உளைச்சல் அடைந்தார்.

இந்நிலையில் நேற்று விஷம் குடித்த ராமச்சந்திரன் செல்வபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...