முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இரு குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மறுவேலைவாய்ப்பு அடிப்படையில் குடிமைப்பணியில் வேலைவாய்ப்பு பெற்று குடிமைப் பணிக்கான ஓய்வூதியம் பெற்று உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவிரர்களின் கைம்பெண்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு இராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் குடிமைப்பணியில் பணியாற்றியமைக்கான குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டள்ளது.

2013 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு, குடிமைப்பணியில் மறுவேலைவாய்ப்பு பெற்று பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்பு ஓய்வூதியம் பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த குடிமைப்பணியில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் இவ்வரசாணையின்படி முன்னாள் படைவீரர்கள் பணியாற்றிய குடிமைப்பணி துறையினை அணுகி குடும்ப ஓய்வூதியம் குறித்தான கருத்துருவினை மாநில கணக்காயருக்கு பரிந்துரை செய்து பயனடையலாம்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், 0422- 2214107 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது நேரில் தொடர்புகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...